பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் தபால் நிலையத்திற்கு தளபாடப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு அன்மையில் ஏறாவூர் தபால் நிலையத்தில் நடைபெற்றது.
ஏறாவூர் தபால் நிலைய தபால் அதிபர் ஏ.எல்.எம்.றியால் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின்போது முதல் தர தபாலகமாக உள்ள ஏறாவூர் தபால் நிலையத்தை 'விஷேட தர தபாலகமாக' தரமுயர்த்துவது தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.