நூரானியா பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்ப்பதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை

எம்.ரீ. ஹைதர் அலி-

ட்/மம/ காத்தான்குடி நூரானியா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நூரானிய வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுடனான சந்திப்பொன்றை 2017.01.09 - திங்கட்கிழமை பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


ஆரம்ப பிரிவின் ஆசிரியர் பாற்றாக்குறை காரணமாக தமது பிள்ளைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை எனவும் இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றதொரு அச்சம் எங்களிடம் காணப்படுவதாகவும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வொன்றினை உடனடியாக பெற்றுத்தருமாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பெற்றோர்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...

இத்தகைய ஆரம்பப் பிரிவிற்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் பரவலாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படுவதாகவும், இதற்கான உரிய தீர்வினை உடனடியாக பெற்றுக் கொடுக்குமாறும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்பட்டு மேலதிகமாக ஆசிரியர் ஆளணிகள் உள்ள பாடசாலைகளிலிருந்து பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்கும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் இப்படசாலைக்கான ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவரை பெற்றுத்தருவதற்கு நான் உறுதியளிப்பதோடு, மேலும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக பட்டதாரி ஆசிரியர் ஒருவரை நியமிப்பதற்கு அதிபர் அவர்களுக்கு நான் பரிந்துரை செய்வதோடு அவ்வாறு தற்காலிகமாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவருக்கான சம்பளத்தினை எனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதற்கும் உறுதியளிக்கின்றேன் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -