இறக்காமம் பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு..!

எஸ்.எம்.சன்சீர்-
றக்காமம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் வேண்டுகோளுக்கு இனங்க இறக்காமம் முகைதீன் கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் நபிலா றாஸித் பள்ளிவாசலுக்கு அன்மையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த நிதியிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்களை அப்பள்ளிவாசல் நிருவாக சபையினரிடம் கையளித்தார். 

மேலும் அக்கிராமத்தையும் பள்ளிவாசலையும் பார்வையிட்ட அவர் பள்ளிவாசல் மதிலுக்கான நிதியுதியினை செய்தருவதாகவும் இப்பிரதேசத்திற்கு என்னால் இயன்ற அளவில் அபிவிருத்திகளை செய்து தருவேன் என்றும் வாக்களித்தார். இந்நிகழ்வின் போது இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர், யு.கே.ஜெபீர் மௌலவி மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.ஜிப்ரி, எம்.எல்.முஸ்மி மற்றும் இறக்காமம் அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் ஆகியோருடன் கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். அதீக் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -