நிந்தவூரில் பல்கலைக்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

சுலைமான் றாபி-
ண்மையில் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) கணக்கீட்டுப் பாட ஆசிரியரும், IGK கல்வி நிறுவன பணிப்பாளருமான ஐ.எல்.ஏ. சலாம் தலைமையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், முன்னாள் மாகாண உதவிக்கு கல்விப்பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபையின் தவிசாளருமான எம்.எச். யாக்கூப் ஹசன், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களான ஏ. ஹலீம், எம்.ஜி. சபீனா ஹசன், ஆசிரியர்களான ஆர்.எம். ஜலீல், எம். றஸ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்த கௌரவிப்பு நிகழ்வில் இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியெய்திய கலைப்பிரிவைச்சேர்ந்த 06 மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் 26 மாணவர்களும், தொழில்நுட்ப பிரிவில் 06 மாணவர்களும், பௌதீகவியலில் 07 மாணவர்களும், பொறியியல் பிரிவில் 02 மாணவர்களுமாக மொத்தம் 47 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சையில் விஷேட திறமைகளைக் காட்டும் மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -