சுலைமான் றாபி-
அண்மையில் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) கணக்கீட்டுப் பாட ஆசிரியரும், IGK கல்வி நிறுவன பணிப்பாளருமான ஐ.எல்.ஏ. சலாம் தலைமையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், முன்னாள் மாகாண உதவிக்கு கல்விப்பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபையின் தவிசாளருமான எம்.எச். யாக்கூப் ஹசன், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களான ஏ. ஹலீம், எம்.ஜி. சபீனா ஹசன், ஆசிரியர்களான ஆர்.எம். ஜலீல், எம். றஸ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த கௌரவிப்பு நிகழ்வில் இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியெய்திய கலைப்பிரிவைச்சேர்ந்த 06 மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் 26 மாணவர்களும், தொழில்நுட்ப பிரிவில் 06 மாணவர்களும், பௌதீகவியலில் 07 மாணவர்களும், பொறியியல் பிரிவில் 02 மாணவர்களுமாக மொத்தம் 47 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சையில் விஷேட திறமைகளைக் காட்டும் மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.