படகில் கள்ளத்தனமாக வெளிநாடு சென்றோரைக் காணவில்லை என்று இலங்கையில் தேடமுடியாது -ரணில்

காணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது எனவும் படகில் கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (25) தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தாம் அறிந்துகொள்ள விரும்புவதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க வினவியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நபர்கள் தொடர்பான எவ்வித தகவலையும் இலங்கைக்குள் தேட முடியாது என பொலிஸார் கூறுகின்றனர். தற்போதுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக அவர்கள் கூறினார்கள். ஏனையவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இலங்கையில் இல்லை. வெளிநாடு சென்றார்கள் என சட்டரீதியான தகவல்களும் இல்லை. படகில் கள்ளத்தனமாக சென்றார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். சிலர் உயிருடன் இல்லை என சந்தேகிக்கப்படுகின்றது. சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் அவதானிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -