றிஸ்வான் சுஹைப்-
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களின் நலன் கருதி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் அவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக திருகோணமலை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 2017.01.02 திங்கள் கிழமையன்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டு அதன் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேற்படி திருகோணமலை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான தனித்துவமான சங்கம் ஒன்றினை நிறுவுவதனூடாக ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களின் நலன் கருதி உரிமைகளை வெண்றெடுக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்காளர்களாக செயற்படவும் சமூகம் மீது அக்கறை கொண்டவர்களாக எல்லா துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கைகொடுத்து செயற்படும் நோக்கோடும் இவ்வமைப்பானது நிறுவப்பட்டிருகிறது.
நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
01 Mr. S.M.Thajudeen - President
02 Mr.H.A.P.Chithranantha - Vice President
03 Mr.A.M.C.Kaldeen Kinniya Vice President
04 Mr.J.M.Ariyasinge Kantale - Secretary
05 Mr.Kanacaganam Morawewa - Vice Secretary
06 Mr.Najimudeen Mutur - Vice Secretary
07 Mr.Jeyandamanabadu - Treasurer
Member’s
08 Mr.N.M.Haneefa
09 Mr.M.M.A.Salam
10 Mr.A.R.M.jeyasinge
11 Mr.V.Jogarasa
12 Mr.M.M.M.Abubakkar
13 Mr.Jenadasa
14 Mr.Veerasundara
15 Mr.Lareef
16 Mrs.Nadarasa
17 Mr.Nihal Veerasooriya
18 Mrs.Premaseely
19 Mr.Ismail
Retired Grama Niladari Society of Trincomalee District – 2016.