திருகோணமலையில் உள்ளாடை திருடியவர் மீது தாக்குதல்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் பல மாதங்களாக பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்த நபரொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று அதிகாலை (02) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் கோமரங்கடவெல பகுதியைச்சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த பகுதியில் பல மாதங்களாக பெண்களின் உள்ளாடைகள் திருடி வருவதாக பேசப்பட்டு வந்ததையடுத்து  இன்று அதிகாலை சந்தேகமான நபர் வீடொன்றிற்கு சென்று உள்ளாடைகளை திருடி விட்டு செல்லும் போது வீட்டு உரிமையாளர் துரத்திச்சென்று பார்வையிட்ட வேளை உள்ளாடைகள் சில மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. உள்ளாடைகளை திருடியமையினால் கோபம் கொண்ட வீட்டு உரிமையாளர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது

தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -