யாழ் திராட்சைப் பழத்திற்கு வெளிநாடுகளில் அதிகம் கிராக்கி..!

பாறுக் ஷிஹான்-
வெளிநாடுகளில் திராட்சைப் பழத்திற்கு அதிகம் கிராக்கி இருந்தாலும் இலங்கையில் அதன் கிராக்கி குறைந்து வருகின்றது என்று திராட்சை பழ் செய்கை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் திராட்சைப் பழச்செய்கை 325 ஹொட்ரெயர் நிலப்பரப்பில் இப் பயிர்ச்செய்கை முதற் கட்டமாக செய்யப்பட்டுள்ளது. இதில் இம்முறை 48 விவசாயிகள் இப் பழச் செய்கையில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஒரு கிலோ திராட்சைப்பழம் 250 ரூபாவாக்கு விவசாயிகளிடம் இருந்து பழ வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். இதனை பழ வியாபாரிகள் 270 ரூபாவில் இருந்து முதல் 300 ரூபா வரை குறித்த பழங்களை விற்கின்றனர்.

இதில் ஒரு தோட்ட விவசாயி ஒரு நாளைக்கு 40 கிலோ படி குறித்த பழவகை அறுவடைசெய்து சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றார்.

இதன் மூலம் 5000 ரூபா ஒரு நாளைக்கு கிடைப்பதாகவும் மூன்று மாதங்களுக்குரியதாக இப்பழச்செய்கை காணப்படுகின்றது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப் பழச்செய்கைக்கான சந்தைவாய்ப்பினை எற்படுத்த ஒரு வழி முறைகள் இல்லை என்பதுடன் சிறந்த சந்தை வாய்ப்பு வழிவகைகளை பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -