ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதான கையளிப்பும் ஒலிபெருக்கி வழங்கிவைப்பும்!

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை உத்தியோக பூர்வமாக கையளித்தலும் குறித்த பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கும் நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சகாப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸம்ஸ் மத்திய கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இதன் மூலம் குறித்த பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்திறமைகள் மேலும் விருத்தியடைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இம்மைதானத்தை விஸ்தரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு அப்பணியினையும் மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும் இப்பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த ஒலிபெருக்கி தொகுதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில்; கொள்வனவு செய்யப்பட்டு பிரதி அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -