பாடசாலை மாணவி ஆட்டோவில் மோதுண்டு விபத்து..!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் இந்துமா சபை வீதியில் 27.01.2017 அன்று ஆட்டோவொன்றுடன் மோதி மாணவி ஒருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சாரதியை கைது செய்ததாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை மாணவி வீதியை கடக்க முயன்றபோது இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்து நேரடியாக இடம்பெறுவதை அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்த மாணவி அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி எனவும், சாரதியை பொலிஸ் பிணையில் விடுவித்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -