க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் இந்துமா சபை வீதியில் 27.01.2017 அன்று ஆட்டோவொன்றுடன் மோதி மாணவி ஒருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சாரதியை கைது செய்ததாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலை மாணவி வீதியை கடக்க முயன்றபோது இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்து நேரடியாக இடம்பெறுவதை அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.
இவ்விபத்தில் காயமடைந்த மாணவி அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி எனவும், சாரதியை பொலிஸ் பிணையில் விடுவித்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.