மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஏழு.மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளனர்.

பி.எம்.எம்.ஏ.காதர்-

ற்போது வெளியாகியுள்ள 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீடசைக்கான பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் பல்கலைக்கழம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும்,இவர்களில் ஏழு மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளதாகவும் அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தெரிவித்hர்.

168 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்து 149 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் இவர்களில் 102 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இவர்களில் 42 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.பல மாணவர்கள் கல்விக்கல்லூரி மற்றும் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலைப் பிரிவில் 12 மாணவர்களும்,வர்த்தகப் பிரிவில் 5 மாணவர்களும்,விஞ்ஞானப் பிரிவில் 18 மாணவர்களும்,கணிதப் பிரிவில் 7 மாணவர்களுமாக 42 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.விஞ்ஞானப்பிரிவில் எம்.ஐ.முகமட் ஜெஸான்,வர்த்தகப்பிரிவில் எம்.ஜே.ஜெனிப் ஹஸ்மத்,ஏ.எஸ்.முகமட் சனோஜ் ஆகியோர் 3.ஏ. சித்திகளைப் பெற்றுள்ளனர்.

எம்.ஐ.எம்.ஜெஸான்,ஆர்.எப்.அஸீபா,எம்.கே.எம்.அப்றாத்,ஏ.யு.எம்.மியாத்,எம்.யு.எப்.ஜீனாஸ்;,எம்.ஏ.எம்.அகீல்,ஏ.றிஸ்தா ஆகியயோரே மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர்களாவர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -