வீதி வியாபாரி போக்குவரத்துக் கடமையில்..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கச்சக்கொடித்தீவு சந்தியில் அமைந்திருக்கும் கமநல சேவைகள் நிலையத்தின் முன்னால் பிரதான வீதியில் இருந்து உள்வீதிக்கு மாறுவதனால் பிரதான வீதியைக் கடந்தேயாக வேண்டும் இங்கு கடப்பதற்கு இவ் வீதியில் மஞ்சல் கடவையின்மை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இதனைக் கடந்தே ஒவ்வொரு நாளும் காலையிலும் பாடசாலை சென்று வரும் போதும் அதிகமான வாகனங்களின் அதிகரிப்பின் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பின்மை என்பதை மாணவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு அச்சந்தியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரியே போக்குவரத்துப் பொலிஸாரின் கடமையை மேற்கொண்டு வருகிறார். எனவே இவ்விடத்தில் மஞ்சல் கடவையை அமைப்பதுடன் பாடசாலை நேரங்களில் போக்குவரத்துப் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி மாணவர்களின் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -