ஹஜ் முகவர்களுக்கு எதிராக ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி யு.எல்.எம்.மஜீட் நியமிக்கப்படவுள்ளார்.
இவ்வாரம் நியமனக் கடிதம் கையளிக்கப்படுமென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
ஹஜ் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் குழுவின் தலைவராகக் கடமையாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.டபிள்யூ. ஏ.சலாம் தனது பதவியை வேலைப்பளு காரணமாக இராஜினாமா செய்ததையடுத்தே அவ்விடத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி யூ.எல்.எம்.மஜீட் நியமிக்கப்படவுள்ளார்.
ஹஜ் முகவர்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகளால் சுமார் 20 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குழு முறைப்பாடுகளை விசாரித்து குற்றவாளிகளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கான தண்டனையை சிபாரிசு செய்யும் எனவும் அவர் கூறினார்.