பாறுக் ஷிஹான்-
நல்லூரில் கோவிலைசூழ போராட்டங்கள் நடத்துவதற்கு தடைவிதித்து பதாகைகள் நேற்று(25) இரவோடு இரவாக நாட்டப்பட்டுள்ளன. காணாமற் போனோரின் உறவுகள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இன்றைய தினம் (26) நல்லூரில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
ஆயினும் நேற்று இரவோடு இரவாக நல்லூரில் தடை பதாகைகள் நாட்டப்பட்டுள்ளன. அப்பதாகையில் நல்லூர் ஆலய சூழல் புனிதம் பேணுவோம். கோயில் வளாகத்திற்குள் (வேலிக்குள்) பாதனிகளுடன் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும். போராட்டங்கள் கூட்டங்கள் நடத்துவது தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.