எம்.ஜபீர்-
நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கிழக்கு இலங்கைக்கான சிறுவர் கல்வி அபிவிருத்திற்கான சீடாஸ் பவுண்டேசனினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் இன்று (31) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன், சீடாஸ் பவுண்டேசனின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் வீ.ரவிச்சந்திரன், சீடாஸ் பவுண்டேசனின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் எம்.யேகசியாமளன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிந்தங்கிய பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேற்படுத்தும் நோக்கில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தழிழ் மக்களின் நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐந்து துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.