அகமட் எஸ். முகைடீன்,ஹாசீப் யாசீன்-
கல்முனை பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணமல்போயுள்ள ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகுகள் மற்றும் மீனவர்களை ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக தேடும் பணி ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்று (2) திங்கட்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கள்அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் பிரதேசத்தில் மீன்பிடியினை மேற்கொள்வதற்காக கல்முனை பிரதேசத்திலிருந்து சென்றஇரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் காணாமல் போயுள்ளது. இப்படகுகளில் ஆறு மீனவர்கள்சென்றிருந்தனர். இம்மீனவர்கள் 4 – 5 நாட்களில் கரைவந்து சேர்வது வழக்கமாகும். ஆனால் இம்முறை 11நாட்களாகியும் கரைவந்து சேரவில்லை.
இதுதொடர்பாக மீனவர்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்குகொண்டுவந்ததைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தஅமரவீரவை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேரில் சந்தித்து குறித்த மீனவர்களை தேடும் பணியினைமேற்கொள்ள உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்..
அதற்கமைவாக கடல் மார்க்கமாக தேடும் பணியினை கடற்படையினரும் ஆகாய மார்க்கமாக தேடும்பணியினை விமானப் படையினரும் மேற்கொண்டுவருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா தெரிவித்தார்.