தோப்பூரில் வீட்டுக்கு வீடு மரம்..!

நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் வீட்டுக்கு வீடு மரம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மரம் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (12) திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சரை சந்தித்த தோப்பூர் மக்கள் தங்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் லாபிர் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -