எம்.வை.அமீர் -
கல்முனை தீன/த் பௌண்டேசனின் வேண்டுகோளுக்கிணங்க நல்லாட்சிக்கான தேசிய இயக்கத்தினால் (NFGG) அன்பளிப்புச் செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய 50 பொதிகள் கல்முனை பிரதேச தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 10.01.2017 ஆம் திகதி இக்பால் சனசமூகநிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தீன/த் பௌண்டேசனின் கல்விப்பிரிவுத் தலைவரும் தீன/த் இளைஞர் கழக தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான உதவி விரிவுரையாளருமான எம்.வை.எம்.யூசுப் இம்றான் தலைமை வகித்தார்.
நிகழ்வின்போது தீன/த் பௌண்டேசனின் தலைவர் எம்.வை.எம். முஹீப்தீன் செயலாளர் ஏ.ஆர்.எம்.தானீஸ் மற்றும் அஸ்டோ அமைப்பின் தலைவர் யூ.எல்.றியாஸ் ஆகியோரும் மாணவர்களின் பெற்றோரும் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.