மஹிந்தவை சந்தித்த முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா தொலைபேசியில் பேச்சுவார்த்தை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துரையாடியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,தொலைபேசியினூடாகவே முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ மற்றும் சுதந்திரக் கட்சியின் ஏழு முதலமைச்சர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நேற்றைய தினம்,சந்திரிக்காவுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ராஜபக்ச ஆதரவை வழங்க வேண்டும் என மஹிந்தவுடனான சந்திப்பின் போது முதலமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்தவுடனான சந்திப்பிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -