முதல்வர் ஆசையை மூட்டை கட்டி மூலையில் போடுங்க சசிகலாவுக்கு அறிவுரை

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலாவின் விருப்பம் இல்லாமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் பன்னீர்செல்வத்தை, பதவியில் இருந்து இறங்கி, சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன், கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. அந்த நெருக்கடிகள் தற்போது இல்லை என கூறப்படுகிறது. 


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைந்ததும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த சசிகலா, அடுத்த கட்டமாக, முதல்வர் பதவியிலும் உடனடியாகவே அமர்ந்து விட வேண்டும் என கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வந்தார். ஜோதிடர்களும் அதற்கேற்ப நாள், நட்சத்திரம் குறித்துக் கொடுத்தனர். 

ஆனால், போயஸ் தோட்டத்துக்கு வந்திருக்கும் சில ஜோதிடர்கள், தற்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் சரியில்லை என்று கூறியுள்ளனர். ஒருவேளை, பன்னீர்செல்வத்தை தொந்தரவு செய்து, அவரை பதவி இறக்கம் செய்து, அப்பதவியில் அமர்ந்தாலும், சசிகலா தலைமையிலான அரசு, வெகு காலம் நீடிக்காது. கொஞ்சம் பொறுமையாக எதையும் அணுகுவதே நல்லது என கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -