முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலப்பகுதியில் மீன்பிடித் துறை பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். குற்றபுலனாய்வு பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு வழங்கிய ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.