முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன சற்றுமுன்னர் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலப்பகுதியில் மீன்பிடித் துறை பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். குற்றபுலனாய்வு பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு வழங்கிய ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -