திருகோணமலை பீச் மைதானத்தில் பந்து விளையாட தடை

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு அருகிலுள்ள வெலிக்கடைத்தியாகிகள் நினைவுத்திறந்த வெளியரங்கத்திற்கு முன்னால் பீச் மைதானத்தில் பந்து விளையாட வேண்டாம் என நகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலை கடற்கரைக்கு சிறார்கள்.முதியோர்கள் மற்றும் இளம் தம்பதிகள் வருகை தந்து இளைப்பாறும் போது கடற்கரை பீச்சுக்கு உரித்தான மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருவதாகவும் அதனால் பந்து மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி செல்வதாகவும் அதனால் முறுகல் நிலை ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகர சபையும்,பொலிஸாரும் இணைந்து மைதானத்தில் பந்து விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது என விளம்பரப்பலகை போடப்பட்டிருந்தும் தொடர்ந்தும் விளையாடப்பட்டு வருவதாக நகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனால் பீச்சுக்கு ஒதுக்கப்பட்ட மைதானத்தில் விளையாட வேண்டாம் எனவும் நகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -