தேசிய காங்கிரஸுடன் இணைய பகிரங்க அழைப்பு - அஸ்மி ஏ கபூர்

கிழக்கு அரசியலின் மிகப் பெரிய வீழ்ச்சி, தவறு, தன்னை உண்மைக்கு உண்மையாக நேசித்த தன் புழுதிக் காற்றை சுவாசித்து தனக்காக அந்த மண்ணுக்கான அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்ய துப்பாக்கி ரவைகளின் வேட்டுகளுக்கு இரும்புக் கவசம் பூட்டிய தனது ஆளுமையால் பதில் சொன்ன செய்து காட்டிய தலைமையை நோர்வே டோஸ் போரா போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு மக்கள் இரையாகி ஒரு தேர்தலில் வாக்களிக்கத் தவறினோம்.

மீண்டும் இந்த சமுகத்தை அரசியல் வியாபாரிகளிடம் விற்று விடுவதற்க்கு மக்கள் தயாராக இல்லை. இன்று நீங்கள் முஸ்லிம் சமுகத்தின் முன் வைத்த எந்த வெற்று கோசங்களும் வெற்றி பெறாது போக இறுதியில் நேரடியாக எமது மார்க்கத்துக்கெதிரான பல விடயங்களை சட்டமாக்கும் அளவுக்கு நிலை சென்றிருக்கிறது.

எல்லா முஸ்லீம் தலைமைகளும் ஒரு கருத்தில் பணத்துக்காக மதி மயங்கிய போது தேசிய காங்கிரஸ் தலைமைதான் உண்மையை பேசியது. சத்தியத்தை உரைத்தது. பெரிய முஸ்லிம் கட்சிகளிலிருந்து சின்னச்சின்ன கட்சிகளும் தம் பாட்டுக்கு பணங்களுக்காக சோரம் போயின. அதன் விளைவை இன்று உணருகின்றனர். இன்று சமுகம் தொடர்பில் பேச நாதியற்ற தலைவர்கள் உட்கட்சி பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் கிழக்கின் தலைமை வெற்றிடமாக இருப்பதாக சில குழுக்கள் உணருவுவதாக தோன்றுகிறது.

இன்னமும் கிழக்குக்கு உயிரூட்டிய உண்மையான தலைமை இருக்கிறது. யாரும் உரிமை கோர முடியாத பல விடயங்களை சமுகத்திற்காக சாதித்த அரசியல் தலைமை அதாஉல்லாஹ். நீங்கள் என்னன்ன வடிவங்களில் கிழக்கின் தலைமையைக் கைப்பற்ற உள் நுழைகிறீர்கள் என்பதை நாம் உணராதவர்களில்லை. உங்களுக்கு பதில் சொல்லும் காலம் நெருங்கிய வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை மாத்திரம் கருத்தில் கொள்வோர் இணைந்து செயலாற்ற பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -