ஓட்டமாவடி பிரேதேச செயலாளர் பிரிவின் கீழியங்கி வருகின்ற ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், கணக்காய்வாளருமான கிப்ஷாத் அவர்கள் கழகத்தின் வளர்ச்சி நிதிக்காக 50.000 ரூபாய் பணத்தினை அன்பளிப்பாக கழகத்தின் பொருளாளர் புஹாரி முஹமட் அவர்களிடம் நேற்று 13.01.2017 ம் திகதி வெள்ளிக்கிழமை கழக காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
பணத்தினை அன்பளிப்புச்செய்த உறுப்பினர் கிப்ஷாத்துக்கு கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம்.ரஹீம் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கழகத்தின் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதியில்லாத இச்சந்தர்ப்பத்தில் இந்நிதி கிடைத்தது பிரயோசனமளிக்கிறதென்றும், இந்நிதியைக் கொண்டு கழகத்தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஹீம் மேலும் தெரிவித்தார்.
ஃபர்சான்.