நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்..!

சுலைமான் றாபி-
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக ஏ.எல். நிசாமுடீன் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளார்.

27 வருட ஆசிரியர் சேவையைக் கொண்ட இவர் 07 வருட அதிபர் சேவையில் தொடர்ச்சியாக கடமையாற்றி வருவதோடு நிந்தவூரில் காணப்படும் பதுரியா, அல்-மதீனா, இமாம் கஸ்ஸாலி மற்றும் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் பிரதி அதிபராகக் கடமையாற்றியதோடு இறுதியாக நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் பிரதி அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.

இதேவேளை இந்தப் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி கடந்த 24ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் திருமதி என்.யூ.எச்.ஏ. சித்தீக்கின் இடத்திற்கே இவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -