சுலைமான் றாபி-
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக ஏ.எல். நிசாமுடீன் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வருட ஆசிரியர் சேவையைக் கொண்ட இவர் 07 வருட அதிபர் சேவையில் தொடர்ச்சியாக கடமையாற்றி வருவதோடு நிந்தவூரில் காணப்படும் பதுரியா, அல்-மதீனா, இமாம் கஸ்ஸாலி மற்றும் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் பிரதி அதிபராகக் கடமையாற்றியதோடு இறுதியாக நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் பிரதி அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை இந்தப் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி கடந்த 24ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் திருமதி என்.யூ.எச்.ஏ. சித்தீக்கின் இடத்திற்கே இவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.