ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை சற்றுமுன் நீங்கியது

இளைஞர்கள், பெண்களின் தன்னெழுச்சி போரட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியால் மதுரையில் 3 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் தமிழக மக்கள், இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது. ஆனால் இந்த அவசர சட்டம் 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லும். 

ஜல்லிக்கட்டு ஒப்புதலை அடுத்து மதுரை அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதே போல் பால மேட்டில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் வரும் 25-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஓ.பி.எஸ். இன்று மாலை மதுரை புறப்பட்டு செல்கிறார். 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சி போரட்டாமாக எழுந்தது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி என தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இளைஞர்கள் போராட்டம் ஓரிரு நாளில் முடிந்து விடும் என்று நினைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இளைஞர்களில் அறவழி போராட்டத்தை கண்டு வியந்த மத்திய, மாநில அரசுகள் இதற்காக ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி பிரதமரை சந்தித்து மனு அளித்தார். அதற்கு பிரதமர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஆனால் தமிழக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்தார். 

இதனையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவதாக அறிவித்தது. இந்த அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பின்னர் அங்கிருந்து அவசர சட்டவரைவை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஆனுப்பப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தார்.

Dinakaran
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -