எம்.எம்.ஜபீர்-
மாளிகைக்காடு மேற்கு மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசலுக்கு மலசல கூடம் நிர்மாணிக்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசல் தலைவர் சாகீர் ஹுசையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளர் எம்.எம்.எம்.இஸ்மாயில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், பள்ளிவாசல் நிர்வாகம், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி எஸ்.மின்ஹாஜ் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.