குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 11.01.2017 அன்று இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உறவினர் வீட்டுக்கு சென்ற போது வழியில் மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு இவரை கொட்டியுள்ளது. குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், 10.01.2017 அன்று மதியம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருந்தும் 11.01.2017 அன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆறுமுகம் (வயது – 68) என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -