அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
இதனால் பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. வியாபாரத் தளங்கள் வீடுகள் போன்றவற்றிலும் வெள்ள நீர் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் அரசசார்பற்ற அமைப்புகக்களும் உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பதுடன். அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளமையால். விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்தனர்.