நல்லூர் நிர்வாகத்தினரின் புதிய சட்டம்- ஆலய சூழலில் போராட்டங்கள் நடத்த தடை

பாறுக் ஷிஹான்-

ல்லூரில் கோவிலைசூழ போராட்டங்கள் நடத்துவதற்கு தடைவிதித்து பதாகைகள் நேற்று(25) இரவோடு இரவாக நாட்டப்பட்டுள்ளன.

காணாமற் போனோரின் உறவுகள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இன்றைய தினம் (26) நல்லூரில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் நேற்று இரவோடு இரவாக நல்லூரில் தடை பதாகைகள் நாட்டப்பட்டுள்ளன. அப்பதாகையில் நல்லூர் ஆலய சூழல் புனிதம் பேணுவோம். கோயில் வளாகத்திற்குள் (வேலிக்குள்) பாதனிகளுடன் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும். போராட்டங்கள் கூட்டங்கள் நடத்துவது தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் திட்டமிடப்பட்ட படி சிலர் கூடி ஆலயச்சூழலில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -