ஏ.எம்.கீத் திருகோணமலை-
நாட்டின் அபிவிருத்தி என்பது கொழும்பும் அதன் அண்டிய பகுதியும் மாத்திரமல்ல என நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க நேற்று மாலை திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரஒயாற்றுப்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தி என்பது கொழும்பும் மற்றும் அதன் அண்டிய பகுதியுமல்ல இதுவே நல்லாட்சியின் ஜனாதிபதியினதும் பிரதமருடைய முழுநோக்கமாகும். எதிர்காலங்களில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளுக்கு அரசாங்கம் பெருமளவான நிதிகள் ஒதுக்கவுள்ளன. என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிபதி கலபதி, திருகோணலை மாவட்ட அபிவிருத்திக் குழு துணைத் தலைவரும் பாராளுமன்ர உறுப்பினருமான மஹ்றூப் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.