மட்டக்களப்பு தமிழர் விழாவில் பங்கேற்றார் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் -படங்கள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழாவில் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் பங்கேற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை (19.01.2017) நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து பண்பாட்டு பவனி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் வரைச் சென்றடைந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி, எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம், உட்பட அக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -