குச்சவெளி பிரதேசத்தில் கடந்த மாகாண சபையின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக குச்சவெளி பிரதேசத்திற்கான நீர்ப்பாசன உப அலுவலகம் 2010 ம் ஆண்டில் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும் நீர்ப்பாசன அமைச்சருமான உதுமானலெப்பை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
குறித்த அலுவலகம் அணைத்து வசதிகளுடனும் கூடியதாக கிழக்கு மாகாணத்தின் மூன்றாவதாக குச்சவெளி பிரதேசத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாகாண நீர்ப்பாசன பொறியலாளர் அலுவலகமாக அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்று மூன்று வருடத்தை பூர்த்தி செய்த இன்றைய 08.01.2017 உத்தியோக பூர்வமாக கெளரவ கிழக்கு மாகாண விவிசாய நீர்ப்பாசன அமைச்சர் துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது