காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்திப்பு..!

அகமட் எஸ்.முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவு வடக்கு கடல்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள மேலும் நான்கு மீனவர்களின் ; நலன் தொடர்பாக விசாரித்ததோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று காணாமல்போய் மலைதீவு வடக்கு கடல்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள மேலும் நான்கு மீனவர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் அசோக தொற தெனிய மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படைத் தளபதி ஆகியோர் சகிதம் இன்று (13) வெள்ளிக்கிழமை மாலைதீவு தலைநகரில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் மாலைதீவு வடக்கு கடல்பரப்பில் மீட்கப்பட்ட குறித்த நான்கு மீனவர்களும் இன்று (13) மாலைதீவின் தலைநகரான மாலே நகருக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். இம்மீனவர்களை பிரதி அமைச்சர் சந்தித்து கலந்துரையாடி இவர்களின் தேக ஆரோக்கியம் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

குறித்த நான்கு மீனவர்களும் தற்போது ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றனர். தேவை ஏற்படின் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இம்மீனவர்களை நாட்டுக்கு அழைத்துவருதற்கான ஏற்பாடுகளையும் இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் உதவியுடன் பிரதி அமைச்சர் மேற்கொண்டுவருகின்றார். 

குறித்த மீட்புப் பணியில் ஈடுபட்ட கடலோரபாதுகாப்பு படையினர் சிறப்பாக விரைந்து செயற்பட்டு மீனவர்களை மீட்டமைக்கு மாலைதீவு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -