நாட்டிலுள்ள பாடசாலைகளில் பயிற்சிபெறாமலிருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சிவழங்க கல்விஅமைச்சு விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.
பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைகளில் ஆசிரியர் கல்விப்பாட நெறி யினைத்தொடர்வதற்கு விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.
விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கல்விப்பணிப்பாளர் ஆசிரியர்கல்வி நிருவாகக்கிளை கல்விஅமைச்சு இசுருபாய பத்தரமுல்ல எனும் விலாசத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் 28.2016ஆம் இலக்க சுற்றறிக்கைக்கைக்கு அமைவாக விண்ணப்பங்கள் அமைதல் வேண்டும்.
சுற்றறிக்கையையும் விண்ணப்பப்படிவம் மற்றும் ஆலோசனைப்படிவத்தைப்பெற கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப்பார்வையிடலாம்.
அல்லது எந்தவொரு வலயக்கல்விக்காரியாலயத்திலும் பெறலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.