மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிக்கச்சேரி நாளை..!

ட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை 16.01.2017 காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விஷேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில், ஏறாவூர்ப் பற்று பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்க வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண காணி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இடம்பெறும் இந்த நடமாடும் சேவை அடுத்தடுத்து ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற உள்ளதாகவும், திருகோனமலையில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதமளவில் 1500க்கு மேற்பட்டவர்களின் கானிகளுக்கு உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -