சேதனை பசளை விற்பனை நிலையம் திறப்பு..!

த.லோகதக்சன்-
னாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டியும், தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சேதனைப்பசளை விற்பனை நிலையம் செவ்வாய்கிழமை மாலை கறுவாக்கேணி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி..துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எம்.சந்திரபால, மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், மட்டக்களப்பு மாவட்ட உரச் செயலகத்தின் உதவி பணிப்பாளர் கே.எஸ்.எம்.சிறாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேனைப் பசளை விற்பனை நிலையம் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் 'பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்தம் திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபா நிதியளிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களும் பிரதேச விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -