த.லோகதக்சன்-
ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டியும், தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சேதனைப்பசளை விற்பனை நிலையம் செவ்வாய்கிழமை மாலை கறுவாக்கேணி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி..துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எம்.சந்திரபால, மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், மட்டக்களப்பு மாவட்ட உரச் செயலகத்தின் உதவி பணிப்பாளர் கே.எஸ்.எம்.சிறாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனைப் பசளை விற்பனை நிலையம் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் 'பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்தம் திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபா நிதியளிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களும் பிரதேச விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.