கட்சித்தலைவன் சிறையில், மஹிந்தவின் தலைமையில் கட்சியின் மாநாடு

தேசிய சுதந்திர முன்னணியின் வருடாந்த மாநாடு இன்று (22) கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவரான விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இந்த மாநாடு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஸபக்ஸவும் பங்கேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் கடந்த 10ஆம் திகதி நிதி மோடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -