மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் இவ்உயர்தர பரீட்சையில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளிலிருந்து சிறந்த சித்தியுடன் வைத்திய துறை, பொறியியல் துறை, தொழிநுட்பத் துறை, முகாமைத்துவ வர்த்தக துறை மற்றும் கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு காத்தான்குடியிலிருந்து பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்கக் கூடியதொரு விடயமாகும் உள்ளதோடு, சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றம் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போன்று ஏறாவூர், கல்குடா பிரதேசங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே நேரம் பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமல், அவர்கள் மீண்டுமொரு முறை முயற்சி செய்து க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்கு செல்ல வேண்டுமெனவும் வாழ்த்துகின்றேன்.
இதேபோல் எமது மாவட்டம், மாகாணம் மற்றும் நாடளாவிய ரீதியிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவ மாணவியர்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.