கிழக்கு மாகாண நூலகர் டிப்ளோமா சித்தி அடைந்தவர்கள் ஆளுனருடன் சந்திப்பு..!

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நூலகர் தரம் மூன்றிற்கான ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை திறந்த போட்டிப்பரீட்சை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை என வைக்கப்பட்டு டிப்ளோமா சித்தியை கொண்டிருந்த எவரும் சித்தி அடையாத நிலையில் 27 (திங்கள்) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஆளுனரின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டு கிழக்கு மாகாணத்தில் ஏலவே 38 நூலகருக்கான தரம் (3) வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் நூலகர் டிப்ளோமா சித்தி அடைந்த 15 போரையும் நேரடி தகுதியின் அடிப்படையில் உள்வாங்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

இது விடயமாக ஆளுநர் அவர்கள் மீண்டும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருடன் கலந்துரையாடி மீண்டும் பிறிதொரு தினத்தில் விரைவில் பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளரை அழைத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -