யோசிதவின் காதலிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் மகளும் யோசிதவின் காதலியுமான யோஹான ரத்வத்தேவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று (02) யோஹான ரத்வத்தேவிற்கு 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன் கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது போக்குவரத்து சட்டத்தை மீறியதுடன், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது தான் குறித்த அரசியல்வாதியின் மகள் எனவும், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் அவரது வாகன அனுமதி பத்திரம் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று 02) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -