சித்தாலேப நிறுவனம் பரிசில்கள் வழங்கி வைப்பு!

அப்துல்சலாம் யாசீம்-

சித்திரப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு!

சித்தாலேப நிறுவனம் ஜந்தாவது தடவையாக தேசிய ரீதியாக முன்பள்ளி மாணவர்களின் மத்தியில் சித்திரப்போட்டியொன்றினை அண்மையில் நடாத்தியிருந்தது. அதனடிபப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களிடம் இருந்து 4673 சித்திரங்கள் போட்டிக்காக கிடைக்கப்பெற்றிருந்தன.

இவற்றுள் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சித்தாலேப நிறுவனத்தின் சான்றிதழ்இ பதக்கம் மற்றும் பரிசில்களை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார இன்று மாவட்ட செயலகத்தில் வழங்கிவைத்தார்.

ஆக்போபுர இலக்கம் 4 முன்பள்ளி பாடசாலையை சேர்ந்த டி.ஜி.தஸ்மி சமுத்யா முதலாம் இடத்தையும்இ பதவி சிறிபுரஇ சீவலிபுரஇ அய்லொயாட் முன்பள்ளி பாடசாலையைச்சேர்ந்த சமிந்தி நதாஸா தெவ்மினி இரண்டாம் இடத்தையும்இ மூன்றாம் இடத்தை கந்தளாய் முல்லமாவிய முன்பள்ளி அமைப்பை சேர்ந்த டபிள்யு.ஏ.திலிஜனா சந்தாதவுனியும் பெற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -