இது தொடர்பாக குறிப்பிட்ட பாடசாலை அதிபரை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது: நாம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம் இதுவரை ஆசிரியகள் நியமிக்க வில்லை என்ற கருத்தினைத் தெரிவித்தார்.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது: என்னால் எந்தப் பதிலும் கூறமுடியாது. உங்களுக்குப் பதில் தந்தால் என்னை மேலிடத்தில் விசாரிப்பார்கள் என்று பொடுபோக்காகப் பதிலளித்து தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டார்.
இம்போட்மிரர் ஊடகவலையமைப்பு அநீதி இளைக்கப்படும் மக்களுக்காக முற்று முழுதாக களமிறங்கி சேவையாற்றி வரும் ஒரு இணையத்தளம் என்ற வகையில் இந்த வலயக் கல்விப் பணிப்பாளரின் பொடுபோக்கான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். யார் அந்த மேலிடம் சரியான பதில்களைச் சொன்னால் கண்டிக்கும் மேலிடம் யார்..? என்பது பற்றிய ஆராய்வு நடந்து கொண்டிருக்கிறது.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவை இம்போட்மிரர் செய்திப் பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த இஸ்லாம் பாடத்துக்குரிய ஆசிரியர் விடயம் குறித்துக் கேட்டபோது. இதுவரை தனக்கு அப்படியான எந்த முறைப்பாடுகளும் கிடைக்க வில்லை இம்போட்மிரர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளீர்கள் நான் உடனடியாக ஆளுணரைத் தொடர்பு கொண்டு இஸ்லாம் பாட ஆசிரியரை நியமிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வேன் என்று உறுதியாகத் தெரிவித்தார்.