அட்டாளைச்சேனை பாடசாலைகளின் வித்தியாரம்ப விழா..!

எம். ஜே.எம்.சஜீத்-
ல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா இன்று (11) அகில இலங்கை ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது.

இவ்வித்தியாரம்ப விழா அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளிலும் இன்றைய தினம் நடைபெற்றது. அட்டாளைச்சேனை அல்-அர்ஹம், அல்-முனீறா, அரபா வித்தியாலயங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -