எம். ஜே.எம்.சஜீத்-
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா இன்று (11) அகில இலங்கை ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது.
இவ்வித்தியாரம்ப விழா அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளிலும் இன்றைய தினம் நடைபெற்றது. அட்டாளைச்சேனை அல்-அர்ஹம், அல்-முனீறா, அரபா வித்தியாலயங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.