ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தர்காநகர் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றைய தினம் (01.01.2017) தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் சிறப்பாக நடைபெற்றது. தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக இரத்ததான முகாம்களையும் நடத்தி வருகிறது.
முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைதி மார்க்கம் என்பதை பிரச்சாரத்தினூடாக மாற்று மத மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைப் போல், இரத்ததானத்தின் மூலமும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.
அந்த வகையில் கடந்த 01.01.2017 அன்று தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தர்கா நகர் கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.