திருகோணமலை கந்தளாயில் 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்.

எப்.முபாரக்-

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று செவ்வாய்கிழமை (7) உத்தரவிட்டார். சேனாநாயக்க மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 குறித்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், கஞ்சா வைத்திருப்பதாகவும் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் கைது(6) செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -