திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று செவ்வாய்கிழமை (7) உத்தரவிட்டார். சேனாநாயக்க மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், கஞ்சா வைத்திருப்பதாகவும் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் கைது(6) செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.