ஹஸ்பர் ஏ ஹலீம்-
நேற்று 15 மாலை 4.30 மணியளவில் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு ரூபா 35 மில்லியன் பெறுமதியான உபகர்ணங்களை வழங்கியதுடன் வைத்தியசாலை குறைகளை கண்டறியும் பொருட்டு கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுடன் அவசர சந்திப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இதனை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதற்கான முடிவும் எட்டப்பட்டது. இச்சந்திப்பில் வைைத்தியர் கயல்விழி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளார், மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் உட்பட பலரும் பங்கேற்றதுடன் இதன் போது நோயாளர்களையும் பார்வையிட்டு குறைபாடுகளையும் கேட்டறிந்தனர்