அஷ்ரப் ஏ சமத்-
இந்தியா அரசினால் வருடாந்தம் 700 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவா்களுக்கு பலதுறைகளில் கல்வியைத் தொடருவதற்கு நெடுங்காலமாக உதவி வருகின்றது. இலங்கை - இந்தியா நட்புறவு நுாற்றாண்டுகளுக்கும் மேலானது. அயல்நாடான இந்தியா இலங்கையின் பொருளாதார ,கல்வி மற்றும் இலங்கையின் சகலதுறைகனின் அபிவிருத்தியிற்கு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. என சபாநாயகா் கரு ஜயசூரிய தெரிவித்தாா்.
நேற்று(7) கொழும்பு கலாதாரி ஹோட்டலில் இந்தியா அரசின் கல்விக் கண்காட்சி நிகழ்ச்சி கலந்து கொண்டு அதனை சபாநாயகா் கரு ஜயசுரிய மற்றும் இந்தியா உயா் ஸ்தாணிகா் தரிஜித் சிங் சந்து கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனா். இந் நிகழ்வில் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இலங்கை மாணவா்கள் கல்வியைத் தொடா்வதற்கான கண்காட்சியும் இடம்பெற்றது.