415 மில்லியன் ரூபா நிதியில் சகல வசதிகளையும் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா இன்று (01) இடம்பெற்றது.
இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு வைத்தியசாலைக் கட்டிடத்தை திறந்து வைப்பதையும், ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர் உரையாற்றுவதையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் ஞாபகார்த்த சின்னம் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.