சாரதியொருவரை கொடூரமாக தாக்கிய மற்றுமொரு சாரதி (வீடியோ)

குருணாகல் - கிரிவவுல பிரதேசத்தில் இன்று காலை பேருந்து சாரதியொருவரை மேலும் ஒரு பேருந்தின் சாரதி கொடூரமாக தாக்கியுள்ளார். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலை மெலஸிபுரயில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றின் சாரதியே மேற்கொண்டுள்ளார். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள், மெலஸிபுரயில் பயணிகளை ஏற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பயணிகளை ஏற்றியதாக கூறியே குறித்த பேருந்தின் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பேருந்தின் சாரதி தற்போது குருணாகல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் இரும்பு கம்பி ஒன்றை கொண்டு வந்து குறித்த சாரதி மீது கொடூரமாக தாக்கும் விதம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.வீடியோ... 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -